முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மதமாற்ற தடை சட்டம்..!! விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

The Mayiladuthurai Sessions Court has issued an order to issue a warrant against the leader of the Liberation Tigers Party, Thirumavalavan.
12:37 PM Jul 31, 2024 IST | Chella
Advertisement

மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கடந்த 2003ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, வழக்கு தொடர்பாக திருமாவளவனுக்கு தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Read More : மதமாற்ற தடை சட்டம்..!! விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Tags :
திருமாவளவன்மதமாற்ற தடை சட்டம்மயிலாடுதுறை
Advertisement
Next Article