For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வங்கதேச கலவரம் | சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்..!!

Priyanka Gandhi has protested against the attack on minorities in Bangladesh.
06:28 PM Aug 12, 2024 IST | Mari Thangam
வங்கதேச கலவரம்   சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்
Advertisement

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது, குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், வங்கதேசத்தில் நிலவி வரும் இந்தத் தாக்குதலுக்கு, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் ”அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய செய்திகள் கவலை அளிக்கிறது. எந்தவொரு நாகரிகமான சமுதாயத்திலும் மதம், சாதி, மொழி அல்லது அடையாளத்தின் அடிப்படையில் நிகழும் பாகுபாடு, வன்முறை மற்றும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. வங்கதேசத்தின் நிலைமை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும், அங்குள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு பாதுகாப்பையும் மரியாதையையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவ ஆட்சி உறுதி செய்யும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

Read more ; ‘பிணத்தை கூட விட்டு வைக்கல..!!’ சடலத்தை தோண்டி உடலுறவு செய்த கொடூர நபர் கைது..!!

Tags :
Advertisement