For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அவர் ஒரு ஒரு அசாதாரண மனிதர்...! ரத்தன் டாடா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்...!

Prime Minister Modi has condoled the demise of renowned businessman Ratan Tata.
05:43 AM Oct 10, 2024 IST | Vignesh
அவர் ஒரு ஒரு அசாதாரண மனிதர்     ரத்தன் டாடா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
Advertisement

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து பிரதமர் தனது இரங்கல் செய்தியில்; ஸ்ரீ ரத்தன் டாடா ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர், மற்றும் ஒரு அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு அவர் நிலையான தலைமையை வழங்கினார். அதே நேரத்தில், அவரது பங்களிப்பு நாடு போற்றக்கூடியது. அவர் தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் சிறந்த மனிதர்.

நான் முதல்வராக இருந்தபோது குஜராத்தில் அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம். அவருடைய பார்வையை நான் மிகவும் செழுமையாகக் கண்டேன். நான் டெல்லி வந்தபோதும் இந்த தொடர்புகள் தொடர்ந்தன. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement