For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’பிரதமர் மோடியால் தமிழகத்தில் கால் செருப்பை கூட தொட்டு பார்க்க முடியாது’..!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

01:36 PM Apr 06, 2024 IST | Chella
’பிரதமர் மோடியால் தமிழகத்தில் கால் செருப்பை கூட தொட்டு பார்க்க முடியாது’     ஆர் எஸ் பாரதி காட்டம்
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளார் டிஆர்பாலுவை ஆதரித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "எங்கே மோடி வாலாட்டினாலும் இங்கு ஆட்ட முடியாது. வட மாநிலம், ஆந்திரா என அனைவரையும் மிரட்டி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் கால் செருப்பை கூட அவரால் தொட்டு பார்க்க முடியாது. பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளதால் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

Advertisement

இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் மோடி ஏற்கனவே 4 முறை வந்துவிட்டார். இன்னும் 4 முறை வர உள்ளார். எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் பருப்பு வேகாது. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஒரு தேர்தல் வாக்குறுதிக்காகவே ஓட்டு போடலாம்" என்று பேசியுள்ளார்.

Read More : Gold | ரூ.53,000-ஐ நெருங்கும் தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.840 உயர்வு..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Advertisement