For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஓடும் ரயிலில் பாதிரியார் பாலியல் சேட்டை.! கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை.!

12:40 PM Dec 05, 2023 IST | 1newsnationuser4
ஓடும் ரயிலில் பாதிரியார் பாலியல் சேட்டை   கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை
Advertisement

மங்களூரில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த ரயிலில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாதிரியாரை கைது செய்துள்ளனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலில் கோவை நகரைச் சேர்ந்த பாதிரியார் ஜாஜிஸ் பயணம் செய்திருக்கிறார். ஜெனரல் compartment-ல் பயணம் செய்த இவர் சக பயணியான 35 வயது பெண்ணை பாலியல் ரீதியில் சீண்டியதாக தெரிகிறது. இதனை சற்றும் எதிர்பாராத பெண் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் குறித்த சம்பவம் தொடர்பாக தனது கணவரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது கணவர் மற்றும் சக பயணிகள் பாதிரியாரை பிடித்து ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அடுத்து வந்த ரயில்வே நிறுத்தத்தில் பாதிரியார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் பாதிரியார் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement