முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்கள் பகுதியில் மின்சாரம் நிறுத்தமா...? உடனே இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்...!

06:00 AM Nov 25, 2023 IST | 1newsnationuser2
Advertisement

உங்கள் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.

கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Advertisement

மின்சாரம் பல இடங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன. உங்கள் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்.

மழை பெய்யும்போது மின் கம்பங்கள், கம்பிகள், உலோகப் பொருள்கள் அல்லது மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். விழுந்து கிடக்கும் கம்பிகள் அல்லது கம்பிகளைத் தொடக் கூடாது. பேரிடர் மீட்புப் படை எந்த ஒரு துயரச் சூழலையும் கையாள தயாராக உள்ளது. அவசர தேவைக்கு காவல் துறையின் இலவச தொலைபேசி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

Tags :
Eb connectpower cutraintangedcotn government
Advertisement
Next Article