For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜெயிலுக்கு சென்ற போப் பிரான்சிஸ்!… பெண் கைதிகளின் கால்களை முத்தமிட்டு சடங்கு!… ஏன் தெரியுமா?

09:00 AM Mar 30, 2024 IST | Kokila
ஜெயிலுக்கு சென்ற போப் பிரான்சிஸ் … பெண் கைதிகளின் கால்களை முத்தமிட்டு சடங்கு … ஏன் தெரியுமா
Advertisement

போப் பிரான்சிஸ் ஜெயிலுக்கு நேரில் சென்று பெண் கைதிகளின் காலை முத்தமிட்டு புனித சடங்கை நிகழ்த்தினார்.

Advertisement

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள்.

ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Readmore: Shock: விலங்குகளுக்கு தொற்று பரவ மனித இனமே முதல் காரணம்!… அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!

Tags :
Advertisement