For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

70 வயது மூதாட்டியின் சடலத்தை வைத்து பூஜை..!! தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட மகன்..!! பெரம்பலூரில் திடுக்கிடும் சம்பவம்..!!

In Perambalur, the incident of the son who worshiped the body of his dead mother and committed suicide by hanging himself has created a stir.
06:18 PM Jul 03, 2024 IST | Chella
70 வயது மூதாட்டியின் சடலத்தை வைத்து பூஜை     தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட மகன்     பெரம்பலூரில் திடுக்கிடும் சம்பவம்
Advertisement

பெரம்பலூர் மாவட்டம் ரோவர் ஆர்ச் சாலை, முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் காரைக்குடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் என்பவர் தனது தாயுடன் கடந்த ஒரு ஆண்டு காலமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், முத்து நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியும், 35 வயது மதிக்கத்தக்க நபரும் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

Advertisement

மேலும், இறந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தின் மேல் மஞ்சள், குங்குமம், பத்தி, எலுமிச்சை பழம், ஆரஞ்சு பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் இருந்துள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் சடலத்திற்கு அவர் மட்டும் பூஜை செய்தாரா அல்லது வேறு நபர்கள் இறந்த உடலை வைத்து பூஜை நடத்தினார்களா? என சந்தேகிக்கின்றனர்.

மேலும், இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் மனம் உடைந்து மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக ஸ்ரீராம் கடன் பிரச்சனையில் இருந்தாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Read More : BREAKING | கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ராஜினாமா..? என்னதான் நடக்கிறது திமுகவில்..? பெரும் பரபரப்பு..!!

Tags :
Advertisement