கேரளாவில் பரபரப்பு...! அண்ணாமலையை வரவேற்க வைத்த பேனர்கள் அகற்றம்..!
வயநாடு மானந்தவாடியில் அண்ணாமலையை வரவேற்று பாஜகவினர் வைத்த தேர்தல் பிரசார பேனர்களை போலீசார் அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் வயநாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்திற்கு வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று மானந்தவாடியில் அண்ணாமலை தலைமையில் ரோடு ஷோ நடத்த பாஜக திட்டமிட்டது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக, நேற்று இரவு, நகரின் பல இடங்களில், பா.ஜ.க வினர் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைத்தனர். இந்த போர்டுகளை வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, போலீசார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் பேனர்களை அகற்றினர்.
போலீசாரின் நடவடிக்கை குறித்து அறிந்த சுரேந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தொண்டர்கள், சுரேந்திரன் முன்னிலையில் பேனர்களை மீண்டும் நிறுவினர். பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் கே.சுரேந்திரன், காங்கிரஸின் ராகுல் காந்திக்கு எதிராக பலத்த போட்டி நிலவுகிறார். வயநாட்டில் உள்ள பல வாக்காளர்கள், மருத்துவக் கல்லூரி தேவை மற்றும் மனித-வனவிலங்கு மோதல் போன்ற தங்களின் பிரச்சினைகளை பாஜக வேட்பாளர் மட்டுமே தீர்க்க முடியும் என்று களத்தில் தீவிரமாக பாஜக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.