For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Covai: பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு...!

07:19 AM Apr 15, 2024 IST | Vignesh
covai  பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
Advertisement

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை காமாட்சிபுரத்தில் நேற்று இரவு விதிகளை மீறி பரப்புரை மேற்கொண்டதாக காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது வாக்குவாதம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரில் அண்ணாமலை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு, அனுமதியின்றி கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement