For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அழுகிய சடலமாக மீட்கப்பட்ட தாய் தந்தை மகன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி சம்பவம் .! ஒருவர் கைது.!

01:50 PM Dec 23, 2023 IST | 1newsnationuser4
அழுகிய சடலமாக மீட்கப்பட்ட தாய் தந்தை மகன்   விசாரணையில் வெளியான அதிர்ச்சி சம்பவம்    ஒருவர் கைது
Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விவசாய நிலத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள காடியார் கிராமத்தில் விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் மூன்று சடலங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர்கள் ராதா கிருஷ்ணன் அன்னபூரணி மற்றும் அவர்களது மகன் சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த நபர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பக்கத்து நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்திருந்த ராமமூர்த்தி என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ராமமூர்த்தி நிலத்தில் உள்ள மின்சார வேலியில் சிக்கி 3 பேரும் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags :
Advertisement