முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மருத்துவமனையில் கஞ்சா விற்பனை.! வட மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் மருத்துவ மாணவர் கைது.!

02:45 PM Dec 04, 2023 IST | 1newsnationuser4
Advertisement

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கஞ்சா விற்ற வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அஜித் குமார் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு தஞ்சாவூர் பணி செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பீமன் நகரில் தங்கியிருந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பூரன் பிமால்(35) என்பவரது வீட்டில் சோதனை செய்த போது கஞ்சா போட்டு தங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. ஜிப்மர் மருத்துவமனையின் முன்னாள் எம்பிபிஎஸ் மாணவரான பூரன் பிமால் தேர்வில் தோல்வியடைந்ததால் பாண்டிச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி செமஸ்டர் தேர்வுகள் எழுதி வந்திருக்கிறார். இப்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கஞ்சா விற்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக தனது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்திலிருந்து கஞ்சா பொட்டலங்களை வரவழைத்து ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்தது தற்போது வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Tags :
Ex school studenthospitalPolicePuducherryWeed
Advertisement
Next Article