For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி.! காதலி தற்கொலை.!புஷ்பா பட நடிகர் கைது.!!

12:55 PM Dec 07, 2023 IST | 1newsnationuser4
அதிர்ச்சி   காதலி தற்கொலை  புஷ்பா பட நடிகர் கைது
Advertisement

பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இந்தத் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிக்கு அமர்ந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நெருங்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜெகதீஷ். பல காட்சிகளில் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா படத்தில் திரையில் தோன்றியிருக்கிறார்.

Advertisement

ஜெகதீஷ் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு தெலுங்கு பட உலகில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவரது காதலியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புஷ்பா பட நடிகரான ஜெகதீஷ் ஜூனியர் ஆர்டிஸ்ட் பெண் ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது காதலி கடந்த 29ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை தனது மகளின் சாவுக்கு அவரது காதலன் ஜெகதீஷ் தான் காரணம் என காவல்துறையிடம் புகார் செய்தார். தனது மகளை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அவருக்கு தொடர்ந்து உளவியல் ரீதியாக கொடுமை செய்து வந்ததால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இறந்த பெண்ணின் செல்போனை போலீஸ் ஆய்வு செய்ததில் நடிகர் ஜெகதீசுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. பிரபலமான வெற்றி படத்தில் நடித்த நடிகர் தனது காதலியின் தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement