PM Modi | பிரதமரின் வாகன பேரணிக்கு அனுமதி கிடையாது..!! கோவை காவல்துறை அதிரடி..!!
04:15 PM Mar 15, 2024 IST | 1newsnationuser6
Advertisement
மார்ச் 18ஆம் தேதி கோவைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பிரசாரம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பிதாரிலிருந்து கோவைக்கு மார்ச் 18ஆம் தேதி பிரதமர் வருகிறார்.
Advertisement
அன்று கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை நடைபெறும் வாகனப் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ். புரம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.