For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரதமர் அதிரடி: "அயோத்தியில் இருந்து திரும்பிய பின் அறிவித்த சூர்யோதயா யோஜனா திட்டம்.." இதன் சிறப்பம்சங்கள் என்ன.?

07:30 PM Jan 22, 2024 IST | 1newsnationuser7
பிரதமர் அதிரடி   அயோத்தியில் இருந்து திரும்பிய பின் அறிவித்த சூர்யோதயா யோஜனா திட்டம்    இதன் சிறப்பம்சங்கள் என்ன
Advertisement

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தலைமை ஏற்று ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் மோடி கும்பாபிஷேக நிகழ்வுகளுக்குப் பிறகு தலைநகர் திரும்பிய அவர் பிரதான் மந்திரி சூரிய யோஜனா திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி ஏழைகள் பயன் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

உலகில் இருக்கக்கூடிய அனைத்து பக்தர்களுக்கும் ஒளியின் சக்தியை வழங்கக்கூடிய ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இந்த சிறப்பான நாளில் நாட்டில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை வலுப்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் ஒரு கோடி ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்படுத்தும் பொருட்டு இந்தத் திட்டத்தை அறிவிப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

இதன்படி இந்தியாவில் இருக்கும் ஒரு கோடி மக்களின் வீடுகளில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் மேற்கூரை திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அயோத்தியில் இருந்து டெல்லி திரும்பிய பிறகு அறிவிக்கும் முதல் திட்டம் இதுவாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு பிரதான் மந்திரி சூரியோதயா யோஜனா திட்டம் என பெயரிட்டு இருப்பதாகவும் பிரதமர் அறிவித்திருக்கிறார்.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு கோடி ஏழை மக்களின் வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தரவருக்கு மக்களின் மின்சார செலவுகள் குறைவதோடு சக்தி உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக வளரும் எனவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

Tags :
Advertisement