முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

படிக்கிற வயசுல தேவையா இதெல்லாம்.? போதை மாத்திரையால் மோதல்.! +2 மாணவன் கொடூர கொலை.!

02:10 PM Dec 30, 2023 IST | 1newsnationuser4
Advertisement

சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்வது தொடர்பான தகராறில் 17 வயது பள்ளி மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்ற அஜய் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அதே பகுதியில் உள்ள மறைவான இடத்தில் வெட்டு காயங்களுடன் அஜய் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் போதை மருந்து விற்பனை செய்வது தொடர்பான மோதலில் அஜய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது. எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணபிரான் மற்றும் சரவணன் இருவரும் இணைந்து போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்திருக்கிறது .

இந்நிலையில் கண்ணபிரான் தனது நண்பரான டேவிட் என்பவருடன் சேர்ந்து சரவணனை தேடி இருக்கிறார். அப்போது சரவணன் கிடைக்காததால் அவரது உறவினரான அஜயை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று போதை மருந்துகள் விற்பனை தொடர்பாக அவரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அஜயை வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக டேவிட் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் கண்ணபிரானை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags :
+2 Student MurderChennaicrimeDrug MafiaTamilnadu
Advertisement
Next Article