முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'தயவு செய்து கொஞ்சம் பொறுமையா இருங்க'..!! 'தண்ணீர் பாட்டிலுடன் மிக்சர், பிஸ்கட் வரும்'..!!

Thaveka General Secretary Bussi Anand requested the volunteers who have come to the conference to maintain peace.
01:24 PM Oct 27, 2024 IST | Chella
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. மாநாடு நடக்கவிருக்கும் இடத்திற்கும் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் குடிநீர், உணவு இல்லாமலும், கடும் வெப்பம் நிலவுவதாலும் மக்களில் சிலர் மயக்கமடைந்துள்ளனர். காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாடு நடைபெறும் நடத்திற்கு வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.

Advertisement

மேடைக்கு அருகே தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், திடலின் பல இடங்களில் அமர்ந்திருக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வந்துள்ளவர்களில் பலர் மயக்கம் அடைந்துள்ளனர். அங்கு குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தொண்டர்களிடம் அமைதி காக்கும்படி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டார். தண்ணீர் கிடைக்காமல் சிலர் மயக்கம் அடைந்துள்ள நிலையில், அனைவருக்கும் தண்ணீர் பாட்டிலுடன் மிக்சர், பிஸ்கட் வழங்கப்படும் என்றும் வந்திருக்கக் கூடிய அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும். மேலும், தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Read More : இரவில் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! காலையில் கட்டாயம் இது இருக்கணும்..!!

Tags :
தண்ணீர் பாட்டில்தமிழக வெற்றிக் கழகம்மயக்கம்விஜய்
Advertisement
Next Article