முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு...; ஊர்காவல் படையில் சேர 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Persons above 18 years of age can apply to join the Home Guard
08:37 AM Oct 22, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை ஊர்காவல்படை துணை மண்டல தளபதிக்கான பணியில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பெருநகர காவலில் நான்கு மண்டலத்திற்கு உண்டான ஊர்காவல்படை துணை மண்டல தளபதிக்கான (Deputy Area Commanders) பணியில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படமாட்டாது. இப்பணியில் சிறப்பாக மற்றும் மெச்சத்தகுந்த வகையில் சேவை புரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் குடியரசுத்தலைவர் பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும்.

Advertisement

கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறந்த மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்ப கடிதத்துடன், Curriculum Vitae படிவத்தை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு 31.10.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.

முகவரி: சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை-15.

Tags :
Home gaurdtn governmenttn policeசென்னை
Advertisement
Next Article