For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பேராபத்து!… பூமியில் உருவாகிய புதிய பெருங்கடல்!… ஆப்பிரிக்க கண்டத்தை உடைக்க வேகமெடுப்பு!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

11:00 AM Jan 01, 2024 IST | 1newsnationuser3
பேராபத்து … பூமியில் உருவாகிய புதிய பெருங்கடல் … ஆப்பிரிக்க கண்டத்தை உடைக்க வேகமெடுப்பு … ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Advertisement

ஆப்பிரிக்காவின் அஃபார் பகுதியில் ஒரு புதிய பெருங்கடல் உருவாகி வருகிறது. அது ஆப்பிரிக்க கண்டத்தை இரண்டாக உடைக்கு நிகழ்வு வேகமெடுத்து உள்ளதாகவும், இது எதிர்பார்த்ததைவிட விரைவாக நடக்கக்கூடும் என்று புவி விஞ்ஞானி சிந்தியா எபிங்கர் எச்சரித்துள்ளார்.

Advertisement

1980ம் ஆண்டுகளில் இருந்து புவியியல் நிகழ்வுகளை விஞ்ஞானி சிந்தியா எபிங்கர் ஆய்வு செய்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். துரிதப்படுத்தப்பட்ட காலவரிசை ஆரம்பத்தில், டெக்டோனிக் தகடுகளின் மாற்றத்தால் இந்த புதிய கடல் உருவாக்கம் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணிக்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் இது ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குள் அல்லது அதற்கும் குறைவாக கால இடைவெளியிலேயே நிகழலாம் என்று கூறுகின்றன.

எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபாபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவி இயற்பியலாளர் அடாலே அயேல் தலைமையில் 2009 -ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, எரிமலைக் குழம்பின் மூன்று மூலங்களை அடையாளம் கண்டறிந்தது. அவை தபாஹு-காப்'ஹோ மற்றும் அடோ'அலே எரிமலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிகழ்வுக்கு காரணமானவை. இந்த மூலங்களில், மிகப்பெரிய பகுதியிலிருந்து எரிமலைக் குழம்பு பாய்ந்ததாகக் கண்டறியப்பட்டது. ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற அறிவியல் இதழில் அயேல் வெளியிட்ட கட்டுரையில், இந்தப் பகுதியில் எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் காரணமாக, படிப்படியாக ஒரு புதிய கடல் உருவாகும் என்று கூறுகிறார்.

பிபிசி பிரேசில் மின்னஞ்சல் மூலம், அயேலின் ஆய்வு குறித்து அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், "பல பிளவுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்க தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து யூரேசிய தட்டுடன் மோதி, ஆல்ப்ஸில் மலைகளை உருவாக்குகிறது" என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும், இந்த முழு புவியியல் நடவடிக்கையும் அடுத்த சில நூற்றாண்டுகளில் அல்லது சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் நடக்காது. "நிலநடுக்க வரைபடம் ஒரு கடல் உருவாகி வருவதைக் காட்டுகிறது, ஆனால் அதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும்" என்று அயேல் தெரிவித்தார்.

கடந்த மாதம், டெக்னோபிசிக்ஸ் இதழில் ஒன்பது விஞ்ஞானிகள் சேர்ந்து ஆய்வுக் கட்டுரை வெளியானது. அந்த குழுவில் அயேலும் எபிங்கரும் பங்காற்றியிருந்தனர். இந்த பகுதியில் நிகழும் புவியியல் நடவடிக்கைகளின் 3D மாதிரியை அந்த ஆய்வு வழங்கியது. இந்த ஆய்வின் முடிவில், இந்தப் பகுதியில் புதியதாக அதிக அளவிலான எரிமலைப் பாறைகள் உருவாகி வருகின்றன என்றும் அஃபார் தாழ்வாரத்தின் கீழ் உள்ள நிலப்பரப்பு மிகவும் மெல்லியதாக இருப்பதையும், 25 கிலோமீட்டருக்கும் குறைவான தடிமன் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

"இந்த வடிவங்கள், அஃபார் தாழ்வாரத்தில் கடல் தளம் பரவ ஆரம்பித்திருப்பதற்கான ஒரு குறுகிய மண்டலத்தை சுட்டிக்காட்டுகின்றன" என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கூறுகின்றனர் . இப்போது செங்கடலின் நீரிலிருந்து புதிய கடல் உருவாக 10 லட்சத்துக்கும் குறைவான ஆண்டுகள் ஆகும் என்று சிந்தியா எபிங்கர் மதிப்பிடுகிறார். "ஆனால் அதை மேலும் துரிதப்படுத்தும் ஒரு பெரிய நிலநடுக்கமும் ஏற்படலாம்" என்று அவர் கூறுகிறார்.

Tags :
Advertisement