For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்கள் தனக்காக பேசத் தொடங்கிவிட்டனர்..! கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து…!

10:37 AM May 04, 2024 IST | Kathir
மக்கள் தனக்காக பேசத் தொடங்கிவிட்டனர்    கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து…
Advertisement

இசையமைப்பாள இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை தொடர்பான விவகாரத்தில், கங்கை அமரனுக்கு கவிஞர் வைரமுத்துவுக்கும் வார்த்தை போர் தொடர்ந்து கொன்டே இருக்கிறது, அந்தவகையில் கங்கை அமரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வைரமுத்து புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

இசையமைப்பாள இளையராஜாவை பாடல்கள் காப்புரிமை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் தான் அனைவருக்கும் மேலானவன் எனக் கறுத்தது தெரிவித்திருந்த இளையராஜா, பின்னர் பாடல்களில் தனது உரிமை தான் மேலானது என கூறியதாக விளக்கம் கூறியிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 'படிக்காத பக்கங்கள்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து பேசியபோது, "இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? என்கிற பிரச்சனை தற்போது சினிமாவில் எழுந்துள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருந்தால் நல்ல பாடல் உருவாகும். ஆனால், சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு, இதைப் புரிந்துகொண்டவன் ஞானி,புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி”, என பேசினார். இது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு இளையராஜிவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போலப் பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் கர்வம் தலைக் கேரிவிட்டது, அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார்.

வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. நான் அவருக்குச் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை.

தன்னை தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்? நான் தான், நான் மட்டும் தான் என இருக்கிறார். இளையராஜா குறித்து சின்ன குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்”, என கூறிஇருந்தார்.

இதற்கு பதில் சொல்லும் விதமாக மே தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உழைப்பு, காதல், பசி இந்த மூன்றுமே மண்ணுலகை இயக்கும் மகா சக்திகள் என்று குறிப்பிட்டுள்ளார். தூக்குக் கயிற்றுக்குக் கழுத்து வளர்த்தவர்களும், குண்டுகள் குடைவதற்காக நெஞ்சு நீட்டியவர்களும் வீர வணக்கத்துக்கு உரியவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சிறப்பு நாளுக்கு ஒரு சிவப்புப் பாடலைக் காணிக்கை ஆக்குவதாகக் கூறியுள்ள வைரமுத்து, தனது எழுத்தில், இளையராஜா இசையில், ஜேசுதாஸ் குரலில் வெளியான பாடலையும் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர்
ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று வைரமுத்து கூறியிருந்தது பேசுபொருளானது. இப்படி இரு தரப்பனாரும் மாற்றி மாற்றி வர்த்திப்போரில் ஈடுபட்டு வரும் நிலையில். தற்போது வைரமுத்து புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர், கவிஞன் தன் குரலை தனித்துக் கொள்ள வேண்டும் என்று கவிதை நயத்தில் கங்கை அமரனுக்கு பதில் அளித்துள்ளார்.

அவரின் பதிவில், "குயில் கூவத் தொடங்கிவிட்டால், காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும். புயல் வீசத் தொடங்கிவிட்டால், ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால், நாணல் நதிக்கரையில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால், கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது" என்று கிவைரமுத்து பதிவிட்டிருந்தார்.

Tags :
Advertisement