முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தவெக மாநாட்டில் மயங்கி விழும் மக்கள்..!! குடிநீர் கிடைப்பதில் சிக்கல்..? கடும் கோபத்தில் விஜய்..!!

Vijay visited Thila from the caravan, didn't he plan properly..? Why this sodappal..? He is said to have spoken to the coordination committee.
01:15 PM Oct 27, 2024 IST | Chella
Advertisement

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. மாநாடு நடக்கவிருக்கும் இடத்திற்கும் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் குடிநீர், உணவு இல்லாமலும், கடும் வெப்பம் நிலவுவதாலும் மக்களில் சிலர் மயக்கமடைந்துள்ளனர்.

Advertisement

காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாடு நடைபெறும் நடத்திற்கு வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். அக்.26ஆம் தேதியன்று மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்ட விஜய், மக்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டார்.

மேடைக்கு அருகே தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், திடலின் பல இடங்களில் அமர்ந்திருக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வந்துள்ளவர்களில் பலர் மயக்கம் அடைந்துள்ளனர். அங்கு குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். மாநாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கும் கார் நிறுத்துமிடங்கள் முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில், புதிதாக வாகனங்கள் நிறுத்தப்படுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, திடலை கேரவனில் இருந்து பார்வையிட்ட விஜய், சரியாக திட்டமிடவில்லையா..? ஏன் இந்த சொதப்பல்..? என்று ஒருங்கிணைப்புக் குழுவிடம் காட்டமாக பேசியதாக கூறப்படுகிறது.

Read More : இரவில் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! காலையில் கட்டாயம் இது இருக்கணும்..!!

Tags :
குடிநீர்தண்ணீர்தவெக மாநாடுமயக்கம்மாநாடுவிஜய்
Advertisement
Next Article