முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களவையில் தொலைத்தொடர்பு மசோதா நிறைவேற்றம்!… அவசர நிலை ஏற்பட்டால் கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசுகளுக்கு முழு அதிகாரம்!

07:08 AM Dec 21, 2023 IST | 1newsnationuser3
Advertisement

நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Advertisement

கடந்த திங்கள்கிழமை மக்களவையில் மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தொலைத்தொடர்பு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும் அல்லது பொதுநலன் கருதியும் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக தமது கட்டுப்பாட்டுக்குள் மத்திய மாநில அரசுகள் கொண்டுவரலாம். அந்த சேவைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியம் அல்லது சூழ்நிலைக்கு உகந்தது என்று கருதினால், மத்திய மாநில அரசுகள் அல்லது அலை சார்பாக சிறப்பு அதிகாரம் பெற்ற அதிகாரம் பெற்ற அதிகாரி, அறிவிக்கை வெளியிட்டு அதை செய்யலாம்.

குற்றம்புரிய தூண்டப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக அவசர நிலை சூழல்களின்போதும் அல்லது பொதுநலன் கருதியும் தொலைத்தொடர்பு சேவைகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை தடுக்கலாம் அல்லது இடைமறித்து அறியலாம். அவசரநிலை பொது ஒழுங்கு உள்ளிட்டவை சார்ந்த விதிமுறைகளின்கீழ் தடை விதிக்கப்பட்டால் இந்தியாவில் வெளியிடுவதற்கு மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்கள் அளிக்கும் பத்திரிகை செய்திகள் இடைமறிக்கப்படாது தடுக்கப்படாது.

செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமின்றி நிர்வாக வழிமுறையிலும் அலைக்கற்றை ஒதுக்கப்படும். தற்போது தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் உரிமை பெறவேண்டும். இதற்கு பதிலாக அந்த நிறுவனங்கள்தொலை தொடர்பு சேவைகளை வழங்க உரிய ஒப்புதல் பெற்றால் போதும். தொலைத்தொடர்பு சாதனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க விண்ணப்பதாரரின் பயோ மெட்ரிக் விவரங்களை கட்டாயம் சரிபார்த்த பின்னரே அவருக்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் சிம் கார்டு வழங்க வேண்டும். ஆள்மாறாட்டம் மோசடி மூலம் தொலைத்தொடர்பு சாதங்கள் அல்லது சிம் கார்டுகள் பெறப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் (நேற்று)புதன்கிழமை நடைபெற்றது. பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால் அவர்களால் விவாதத்தில் பங்கேற்க முடியவில்லை. இதனை தொடர்ந்து விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த மசோதா தொலைத்தொடர்பு துறையில் அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்களை ஊக்குவிக்கும். 138 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்திய தந்தி சட்டம் உள்பட 2 சட்டங்களை இந்த மசோதா ரத்து செய்யும். மேலும், இணைய வழி பாதுகாப்பு பிரச்சனைகளை கையாளுவதற்கான சட்ட அமைப்பு முறையையும் மசோதா வலுவாக்கும் என்று கூறினார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Tags :
lok sabhaTelecommunication Billஅரசுகளுக்கு முழு அதிகாரம்கட்டுப்பாட்டில் கொண்டுவரதொலைத்தொடர்பு மசோதாமக்களவையில் நிறைவேற்றம்
Advertisement
Next Article