முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாடாளுமன்ற தேர்தல்..!! களத்தில் இறங்கிய அதிமுக..!! 4 குழுக்களை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!!

11:53 AM Jan 22, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆகியவற்றை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பெஞ்சமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, ஓ.எஸ்.மணியன், ஆர்பி உதயகுமார், வைகைச்செல்வன், வளர்மதி ஆகிய 10 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர்.

மேலும், தம்பிதுரை, செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ, தனபால் ஆகியோர் தேர்தல் பிரச்சாரக்குழுவில் உள்ளனர். இவர்கள் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைப்பு செய்வார்கள். அதேபோல, சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பி.வேணுகோபால், அப்துல் ரஹீம், ராஜ் சத்யன், ராஜலட்சுமி, விபிபி பரமசிவம், இன்பதுரை ஆகியோர் தேர்தல் விளம்பர பணிகளுக்கான குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Tags :
அதிமுகஎடப்பாடி பழனிசாமிகுழுக்கள் அமைப்புநாடாளுமன்ற தேர்தல்மக்களவை தேர்தல்
Advertisement
Next Article