முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெற்றோர்களே உஷார்..!! பள்ளி பேருந்தில் வைத்து 6 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்த ஓட்டுநர்..!! தாயிடம் வந்து கதறிய சோகம்..!!

It is said that two 6-year-old girls were raped by a 45-year-old man working as a school bus driver.
05:13 PM Oct 03, 2024 IST | Chella
Advertisement

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் வானொவரியே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவ - மாணவிகளை தினமும் பள்ளிக்கு அழைத்து வந்து, பின் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல பள்ளி நிர்வாகம் சார்பில் பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், பள்ளியில் பயின்று வரும் 6 வயது சிறுமிகள் இருவரை, பள்ளியில் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வரும் 45 நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement

பள்ளி மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று விடும்போது, இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டிற்குச் சென்ற சிறுமிகள் இருவரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி, பிறப்புறுப்பு வலிப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பத்லாபூர் பகுதியில் 2 சிறுமிகள் பள்ளியின் தூய்மை பணியாளரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்து, சமீபத்தில் குற்றவாளி என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : பட வாய்ப்பு கிடைக்காததால் இப்படி ஒரு முடிவா..? நேரில் பார்த்த பிரபலம்..!! நடிகை கீதாவுக்கு என்ன ஆச்சு..?

Tags :
சிறுமிகள் பலாத்காரம்பள்ளி பேருந்துமகாராஷ்டிர மாநிலம்
Advertisement
Next Article