For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெற்றோர்களே உஷார்..!! யாரையும் நம்பாதீங்க..!! கர்ப்பமான 16 வயது சிறுமி..!! நடந்தது என்ன..?

08:44 AM Apr 08, 2024 IST | Chella
பெற்றோர்களே உஷார்     யாரையும் நம்பாதீங்க     கர்ப்பமான 16 வயது சிறுமி     நடந்தது என்ன
Advertisement

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை மட்டும் கண்காணிப்பது போதாது. யாரை வேலைக்கு அமர்த்துகிறீர்கள் என்பதில் துவங்கி, சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர் என எல்லோரையுமே எளிதில் நம்பிட வேண்டாம். காலம் கெட்டுக் கிடக்கு. அது அண்ணன் முறையாக இருந்தாலும் சரி, சித்தப்பா முறையாக இருந்தாலும் சரி. ஒரு சந்தேக கோட்டோடு நிறுத்தி வையுங்கள். வீட்டு கார் டிரைவரே, 16 வயது பள்ளி மாணவியை தனியே அழைத்துச் சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்த நிலையில், மாணவி 8 மாத கர்ப்பமாகியுள்ளார். இது குறித்த வழக்கில், ஏற்கெனவே திருமணமான கார் டிரைவர் போக்சோ வழக்கில் கைதாகியுள்ளார்.

Advertisement

கடலூர் மாவட்டம் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வநாயகம் மகன் சிலம்பரசன் (வயது 38). கார் டிரைவராக பணிபுரியும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் டிரைவராக வேலைப் பார்த்து வந்த வீட்டில் இருக்கும் 16 வயது பள்ளி மாணவியிடம் அடிக்கடி சிரித்துப் பேசி பழகி வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் செல்போனில் பேசும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. அதன் பேரில் அந்த மாணவியும் சிலம்பரசனுடன் செல்போனில் பேசி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மாணவியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை அக்கரைக்கோரி பீச்சுக்கு அழைத்துச் சென்றுள்ளார் சிலம்பரசன். பின்னர், அங்கு ஆள் இல்லாக இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமியை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துள்ளார். பின்னர், இதே போல் பல முறை சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் கடலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார், போக்சோ வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!! டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!! எப்போது தெரியுமா..?

Advertisement