For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெற்றோர்களே உஷார்..!! 10ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! வைரலாகும் வீடியோ..!!

04:17 PM May 10, 2024 IST | Chella
பெற்றோர்களே உஷார்     10ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்     வைரலாகும் வீடியோ
Advertisement

பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது மாணவியை ஆட்டோவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தியா முழுவதும் பள்ளிக் குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்களால் பலியாகி வருவது அதிகரித்துள்ளது. அறிமுகம் இல்லாதவர்களை விட, நன்கு அறிமுகமானவர்களால் தான் இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஓம்கார் நகர் பகுதியில் 10ஆம் வகுப்பு மாணவியை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது, ​​ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, பின்னால் அமர்ந்திருந்த மாணவியை ஓட்டுநர் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். மாணவியிடம் அவர் தவறாக நடந்து கொண்ட இந்த அதிர்ச்சி சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்ததுடன், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். மேலும், மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ பரவிய சில மணி நேரங்களிலேயே ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Read More : இந்த பிரச்சனை இருப்பவர்கள் கரும்பு ஜூஸை தொடவே கூடாது..!! பிரச்சனை இன்னும் மோசமாகும்..!!

Advertisement