முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பானிபூரியால் புற்றுநோய் வரும்..!! 5-7 வருடங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் இந்த பாதிப்பு நிச்சயம்..!! ஆய்வில் அதிர்ச்சி..!!

Ingredients used in pani puri have been found to contain cancer-causing elements in Karnataka.
03:17 PM Jul 01, 2024 IST | Chella
Advertisement

பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோபி மஞ்சூரி மற்றும் கபாப்பில் புற்றுநோயை உண்டாக்கும் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்த கர்நாடக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. தற்போது பானி பூரி பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறை சத்தமில்லாமல் தயாராகி வருகிறது. பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் சாஸ், மீட்டா காரா பவுடர் என 5 வகையான பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் துறையினர் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பானி பூரி மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். அப்போது, ​​பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பானி பூரியில் பயன்படுத்தப்படும் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களுக்கு தடை விதிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ​​“பானி பூரி குறித்து ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 243 மாதிரிகளை சேகரித்துள்ளோம். 41 மாதிரிகள் பாதுகாப்பற்றவை. அத்துடன் 18 மாதிரிகள் தரமற்றவை. மேலும், பானிபூரியில் 4-5 ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4-5 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. அது வந்த பின், கூட்டம் நடத்தி, பானி பூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

பானி பூரியில் பயன்படுத்தப்படும் காரா மற்றும் மிட்டாவில் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிக காரம் சாப்பிடுவதால் அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பானிபூரியை 5-7 வருடங்கள் சாப்பிட்டு வந்தால் அல்சர், புற்றுநோய் வரும்" என்று எச்சரித்தார்.

Read More : மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பணியிட மாற்றம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

Tags :
அல்சர் பாதிப்புஉணவு பாதுகாப்புத்துறைபானிபூரிபுற்றுநோய்
Advertisement
Next Article