For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தனி அறையில் சிக்கிய காதல் ஜோடி.! தந்தை கொடுத்த கொடூர தண்டனை.! பரபரப்பு சம்பவம்.!

02:48 PM Jan 04, 2024 IST | 1newsnationuser7
தனி அறையில் சிக்கிய காதல் ஜோடி   தந்தை கொடுத்த கொடூர தண்டனை   பரபரப்பு சம்பவம்
Advertisement

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த 20 வயது இளம் பெண் மற்றும் அவரது காதலன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலைகளை செய்ததாக இளம் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார். அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

உத்திர பிரதேசம் மாநிலத்தின் பிளசி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் நீது. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த தினத்தன்று தனது காதலியை அவரது வீட்டிற்கு சந்திக்க வந்திருக்கிறான் சச்சின்.

அப்போது சச்சின் மற்றும் நீது இருவரும் வீட்டின் தனி அறையில் இருந்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மகளின் அறையில் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த நீதுவின் பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது தங்களது மகள் வேறொரு இளைஞருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மகேஷ் வீட்டிலிருந்த மண்வெட்டியால் தனது மகள் மற்றும் அவரது காதலனை கொடூரமாக தாக்கி கொலை செய்தார்.

பின்னர் காவல் நிலையம் சென்றடைந்த அவர் நடந்த உண்மைகளை கூறி சரண் அடைந்தார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்த காதலர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தில் தந்தையே மகளையும் அவரது காதலனையும் படுகொலை செய்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement