For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரபல தொழிலதிபரை கொடூரமாக தாக்கிய சொந்த மகன்..!! நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

11:19 AM Apr 26, 2024 IST | Chella
பிரபல தொழிலதிபரை கொடூரமாக தாக்கிய சொந்த மகன்     நெஞ்சை உலுக்கும் வீடியோ
Advertisement

சொத்துக்காக சொந்த தந்தையை மகன் மிகக் கொடூரமாகத் தாக்கும் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Advertisement

நேற்றைய தினம் இணையத்தில் ஷாக் வீடியோ ஒன்று வேகமாகப் பரவியது. சுமார் 3.40 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை பார்த்தாலே நமக்கு மனது பதைபதைக்கிறது. அந்த வீடியோவில் சோபா ஒன்றில் முதியவர் ஒருவர் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அப்போது திடீரென அங்கு வரும் முதியவரின் மகன் அவரது முகத்தில் ஆவேசமாகத் தாக்குகிறார். தந்தை என்று கூட பார்க்காமல் சரமாரியாக தாக்குகிறார். அதில் அவரது முகத்தில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. ஆனாலும், விடாமல் தொடர்ச்சியாகத் அடிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் ஆவேசமாக அவரை உதைக்கவே அப்படியே சோபாவில் சாய்கிறார். பின்னரே இந்த களேபரங்களைக் கேட்டு அங்கு ஒரு பெண்ணும் மற்றொரு நபரும் ஓடி வருகின்றனர். அந்த இளைஞனை உதவிக்கு வந்த நபர் பிடித்துக் கொள்ள, அந்த பெண் அந்த முதியவருக்கு முகத்தில் இருந்து வரும் ரத்தத்தை நிறுத்த முயல்கிறார். மீண்டும் அங்கு வந்த இளைஞர் எதையோ தூக்கி வீசி அந்த முதியவரைத் தாக்க முயல்கிறார். அப்போது அருகே இருக்கும் மற்றொரு நபர் அந்த இளைஞரைப் பிடித்து இழுத்துச் செல்கிறார். பின்னரும் கூட அந்த முதியவரை மீண்டும் மீண்டும் அவரது மகன் தாக்க முயல்கிறார்.

அங்கிருந்த மற்றவர்கள் அவரை பிடித்து இழுத்துச் செல்கின்றனர். அதற்குள் அந்த முதியவர் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டை அவரது ரத்தம் பட்டே சிவப்பு நிறத்தில் மாறிவிட்டது. அந்தளவுக்குக் கொடூர தாக்குதல் நடந்துள்ளது. அதேபோல மற்றொரு வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் அந்த முதியவரைச் சிலர் காருக்குள் அழைத்துச் செல்கிறார்கள். அப்போதும் மீண்டும் அவரது மகன் வந்த சரமாரியாகத் தாக்க முயல்கிறார். அந்த முதியவர் அப்படியே காரில் இருந்து சரிகிறார். நல்வாய்ப்பாக அதற்குள் சுற்றி இருந்த மற்றவர்களை அந்த இளைஞனைப் பிடித்து இழுத்துச் செல்கிறார்கள்.

அதாவது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு. அவரது மகன் சக்திவேல்.. இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இதற்கிடையே, குழந்தைவேலு பெயரில் இருக்கும் சொத்தை பிரித்துத் தரக் கோரி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் தான் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைவேலு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இந்நிலையில் தான், குழந்தைவேலுவை சக்திவேல் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பலரும் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். சக்திவேலை இப்போது போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Read More : AC-யை பயன்படுத்தினாலும் கரண்ட் பில் வரக்கூடாதா..? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..!! இனி கவலையே இல்ல..!!

Advertisement