முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செக்..! அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களின் விவரம் அனுப்ப உத்தரவு...!

Order to send details of teachers who have pursued higher education without obtaining permission
06:44 AM Sep 25, 2024 IST | Vignesh
Advertisement

ஊராட்சி ஒன்றியம் நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் துறை அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரங்கள் தொகுத்து அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; ஊராட்சி ஒன்றியம் நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் துறை அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரங்கள் தொகுத்து அனுப்ப வேண்டும். இத்துடன் இணைக்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி செய்து அவ்விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) ஆய்வு செய்து ஒன்றியம் வாரியாக தொகுத்து கையொப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும்.

மேலும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலக (தொடக்கக் கல்வி) இருக்கைப் பணியாளருடன், சென்னை-6 தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள நாளில் நேரில் வருகை புரிய தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Edu departmentschoolstafftn government
Advertisement
Next Article