For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’நீ மட்டும்தானு சொன்ன... இங்க இத்தன பேரு இருக்காங்க’..!! இன்ஸ்டா காதலனால் கதறிய இளம்பெண்..!!

02:43 PM May 07, 2024 IST | Chella
’நீ மட்டும்தானு சொன்ன    இங்க இத்தன பேரு இருக்காங்க’     இன்ஸ்டா காதலனால் கதறிய இளம்பெண்
Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (20). இவர், எப்போதும் சமூகவலைதளங்களில் இருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், இவருக்கு 19 வயதான இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் தங்களுடைய செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டு நெருங்கி பழகி வந்துள்ளார். ஒருமுறை அந்த பெண்ணுக்கு போன் செய்த சந்துரு தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, அந்த பெண்ணும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Advertisement

அப்போது வீட்டில் சந்துருவின் நண்பர்களான தனுஷ் (20), சக்தி (20) ஆகிய மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இதனை அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோவும் எடுத்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பெண், யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. நிச்சயமும் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் எடுத்த ஆபாச வீடியோவை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனை சற்றும் எதிர்பாராத மாப்பிள்ளை, வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், திருமணம் நின்று போனது. இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : உங்கள் துணை உங்களை விட்டு பிரியாமல் இருக்க இதை பண்ணுங்க..!! இது ரொம்ப முக்கியம்..!!

Advertisement