For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த விஷயங்கள் மட்டும் வீட்டிற்குள் வரவே கூடாது!! இல்லையெனில் ஆபத்து!!

06:12 AM May 30, 2024 IST | Baskar
இந்த விஷயங்கள் மட்டும் வீட்டிற்குள் வரவே கூடாது   இல்லையெனில் ஆபத்து
Advertisement

வீட்டில் சில விஷயங்களை வைத்து அந்த வீட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை ஆன்மீகத்தின் அடிப்படையில் நாம் கணித்துவிட முடியும்.

Advertisement

நம் வீடுகளில் இந்த விஷயங்கள் மட்டும் வந்து விடவே கூடாது. அப்படி வந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1)வீட்டை சுற்றிலும் களை செடிகள் இருந்தால் அதை முதலில் பிடுங்கிவிடுங்கள். வீட்டை சுற்றிலும் தேவையற்ற செடிகள், முட் செடிகள், கொடிகள் போன்றவை வளரக்கூடாது. இது குடும்பத்தில் வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

2)வீட்டிற்குள் புது பெயிண்ட் அடித்தாலும், சுண்ணாம்பு, வெள்ளை அடித்து வைத்திருந்தாலும் கூட கரையான் வருகிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்று அர்த்தம். இந்த கரையான் புற்றுகள் வீட்டில் படையெடுக்க ஆரம்பித்து விட்டால், உங்களுடைய செல்வமும் அரித்துவிடும் என்று ஆன்மீகத்தின் அடிப்படையில் நம்பப்படுகிறது.

3)வீட்டிற்குள் பூரான் வருவது வீட்டின் சுத்தமின்மையை குறிக்கிறது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் குப்பையாக வைத்திருந்தால் விஷ ஜந்துக்கள் வர வழிவக்கும். எனவே, இந்த மாதிரியான விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழைவது என்பது சாஸ்திர ரீதியாக துரதிஷ்டங்களைக் கொண்டு வரக்கூடியது என்று நம்பப்படுகிறது. மேலும் இது செல்வ செழிப்பை குறைக்கும்.

4)ஐந்து வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களுடைய பரண் மேல் இருக்கும் பொருட்களை இறக்கி அதை நன்கு சுத்தம் செய்து தூசுகள் உள்ளே புகாதவாறு பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். மேலும், வீட்டை எப்பொழுதும் வாசனையாக வைத்திருக்க வேண்டும். வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு விதமான துர்வாடை வீசினால் அந்த வீட்டில் மகாலட்சுமி தங்கவே மாட்டாள். உங்களுடைய வருமானம் அதிகரிக்காது, பொருளாதார படிப்படியாக குறையும் எனவே வீட்டை எப்பொழுதும் வாசனையாக வைத்திருங்கள்.

5) அதிகபட்சம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறையாவது வீட்டை பராமரிப்பு செய்ய வேண்டும். வீட்டை நீங்கள் சரிவர பராமரித்தால் மட்டுமே உங்களுடைய செல்வ செழிப்பானது வளர செய்யும். இல்லையென்றால் தரித்திரம் வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. யாராவது ஒருவர் மாற்றி ஒருவருக்கு நோய்கள் வருவதற்கும், அதற்காக வீண் செலவுகள் செய்வதற்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

Read More: ‘மாட்டின் சிறுநீரில் குளித்து, சாணத்தை சன் ஸ்க்ரீமாக பயன்படுத்தும் மக்கள்!!’ எங்க இருக்காங்க தெரியுமா?

Tags :
Advertisement