For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆன்லைன் சூதாட்டம்.... பணத்தை இழந்த மாணவர்.... விபரீத செயலால் குடும்பத்தினர் அதிர்ச்சி....

09:30 AM May 17, 2024 IST | shyamala
ஆன்லைன் சூதாட்டம்     பணத்தை இழந்த மாணவர்     விபரீத செயலால் குடும்பத்தினர் அதிர்ச்சி
Advertisement

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொருக்குப்பேட்டை கே.கே.நகரை சேர்ந்தவர் தனுஷ். இவர், ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் கொண்ட தனுஷ், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதிலும், இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக தொடர்ந்து விளையாடி வந்திருக்கிறார் தனுஷ்.

Advertisement

இந்த நிலையில், தனுஷ் தனது தந்தையிடம் 24 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த தனுஷின் தந்தை 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். இதையடுத்து 4 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு தனது அறைக்கு சென்ற தனுஷ் கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, தனுஷின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக விரைந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது தனுஷ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து தனுஷ் உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தனுஷின் செல்போனை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்..? டைம் ரொம்ப முக்கியம்..!! லேட்டா சாப்பிட்டால் என்ன ஆகும்..?

Tags :
Advertisement