முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு...!

One person died after a car belonging to actress Rekha Nair collided in Jabargaonpet area of ​​Chennai.
07:38 AM Aug 28, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். வீதியில் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது அந்த வழியாகச் சென்ற கார் ஏறியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதையடுத்து கார் ஓட்டுநரான பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சென்னை, ஜாபர்கான் பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த 55 வயது மஞ்சன் என்பவர் நேற்றிரவு மதுபோதையில் ஜாபர்கான் பேட்டை பச்சையப்பன் தெரு சாலையோரத்தில் படுத்து கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் காரை ஓட்டி வந்தது, எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி (25) என்பதும், இவர் நடிகை ரேகா நாயரின் வீட்டில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருவதும், கார் நடிகை ரேகா நாயரின் பெயரில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் பாண்டியை கைது செய்தனர்.

Tags :
car accidentChennaiRekha naiar
Advertisement
Next Article