For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒலிம்பிக் மல்யுத்தம்..!! காலிறுதிக்கு தகுதிபெற்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்..!!

Indian athlete Aman Sherawat has qualified for the quarter finals in the 57 kg wrestling competition.
04:25 PM Aug 08, 2024 IST | Chella
ஒலிம்பிக் மல்யுத்தம்     காலிறுதிக்கு தகுதிபெற்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்
Advertisement

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, பல்வேறு பிரிவுகளில் பதக்கத்திற்காக போராடி வருகிறது. இதுவரை 3 பதக்கங்களை இந்தியா வென்றுள்ள நிலையில், இன்று இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ராவும், வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணியும் விளையாட இருக்கின்றன.

Advertisement

இந்நிலையில், இந்தியாவிற்கு மேலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் அமன் ஷெராவத் வடக்கு மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதிப் போட்டியில் ஜெலிம்கான் அபகாரோவை எதிர்த்து விளையாட உள்ளார். காலிறுதிப்போட்டியானது இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது. மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் 16-வது சுற்றில் தோற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் ’தமிழ்ப்புதல்வன்’ திட்டம்..!! நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

Tags :
Advertisement