முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மயிலாடுதுறை | காதலியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!!

The incident of a young man stabbing an old man has created a stir
05:30 PM Jul 12, 2024 IST | Mari Thangam
Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன்(25). அருள்செல்வன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருநாள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததை அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் பார்த்துள்ளார்.

Advertisement

அதனை 60 வயதான முதியவர் சீனிவாசன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருள்செல்வன் முதியவரின் தலை மற்றும் முகம் உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர் சீனிவாசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சீனிவாசன் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more | ‘தினமும் சிரிப்பது கட்டாயம்..!!’ ஜப்பானில் புதிய சட்டம்.. குழப்பத்தில் மக்கள்!!

Tags :
arrestmurder attemptமயிலாடுதுறை
Advertisement
Next Article