முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஆக்டோபஸ் அண்ணாமலை மனநல மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்’..!! கடுமையாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்..!!

Annamalai, who has not spilled even a single drop of root, should consult a psychiatrist.
07:19 AM Aug 27, 2024 IST | Chella
Advertisement

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ”வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை மன அழுத்தத்தில், மனநலம் பாதிக்கப்பட்டது போல் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அண்ணாமலை மனநல மருத்துவரை சந்தித்து பரிசோதிக்க வேண்டும். சித்தம் கலங்கியது போல் பேசுவது அவர்களுக்கு தெரியாது, மற்றவர்களுக்கும் புரியாது.

Advertisement

பதவி வெறி மற்றும் மோகத்தினால் மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு சொட்டு வேர்வை கூட சிந்தாத அண்ணாமலை, மனநல மருத்துவரை அணுக வேண்டும். அப்படி இல்லை என்றால் நல்ல மருத்துவரை நாங்களே ஆலோசனைக்கு அனுப்புகிறோம். கர்நாடகாவில் சேவை செய்துவிட்டு தமிழினத்தை கேவலமாக பேசியவர் அண்ணாமலை.

அண்ணாமலை கழுதையாக கத்தினாலும் தமிழக மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. ஆக்டோபஸ் அண்ணாமலை ஒரு கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாது. அழிப்பேன் ஒழிப்பேன் என்ற அரசியல் பேச்சு இதுவரை நாங்கள் பார்த்ததும் இல்லை.. கேட்டதும் இல்லை. கடல் வற்றி கருவாடு திங்கலாம் என்ற காத்திருந்த கொக்கு.? கடைசியில் குடல் வற்றி செத்துப்போனது போல் அண்ணாமலை கனவும் பொய்த்துப் போகும்” என்று கடுமையாக விமர்சித்தார்.

Read More : ரூ.70,000 கோடி சொத்து!. இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார்?. தோனி, கோலிலாம் லிஸ்ட்லையே இல்ல!.

Tags :
அண்ணாமலைஅரசியல்ஆர்.பி.உதயகுமார்
Advertisement
Next Article