முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காதலனின் கவனத்தை பெற கற்பழிப்பு புகார்.! இளம் பெண்ணால் சிக்கலில் சிக்கிய காவல்துறை.!

03:06 PM Dec 27, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கேரள மாநிலத்தில் காதலனின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆட்டோ ஓட்டுனரின் மீது இளம் பெண் ஒருவர் போலியான பாலியல் பலாத்கார புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இளம்பெண்ணை கண்டித்து அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர்.

Advertisement

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் செல்போன் மூலம் தனது காதலனை தொடர்பு கொண்டு தான் பயணம் செய்து வந்த ஆட்டோவின் டிரைவர் தன்னை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது காதலர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து 58 வயது நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் தான் நிரபராதி என கதறி அழுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளம் பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்ற உண்மை வெளியானது.

இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணிடம் விசாரித்த போது தனது காதலனின் கவனத்தை பெறவும் அவர் அரவணைப்பிற்காகவும் இதுபோன்று நாடகம் ஆடியதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த இளம் பெண்ணிற்கு அறிவுரை கூறிய அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
KeralaPolice AdviceRape DramaRickshaw Driver Arrestedyoung woman
Advertisement
Next Article