For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'தகாத உறவால் ஆத்திரம்..' செவிலியரை துப்பாக்கியால் சுட்ட மருத்துவர்.! அதிர்ச்சி சம்பவம்.!

04:13 PM Feb 08, 2024 IST | 1newsnationuser7
 தகாத உறவால் ஆத்திரம்    செவிலியரை துப்பாக்கியால் சுட்ட மருத்துவர்   அதிர்ச்சி சம்பவம்
Advertisement

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததால் செவிலியர் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநில ஜபல்பூர் மருத்துவமனையில் சந்தீப் சோனி(34) என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார் .

Advertisement

இவருக்கும் அதே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் 27 வயது இளம் பெண்ணிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் செவிலியர் தனது முன்னாள் காதலன் உடனான நெருங்கிய உறவை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சந்தீப் மற்றும் செவிலியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .

அப்போது ஆத்திரமடைந்த சந்தீப், துப்பாக்கியால் செவிலியரை சுட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த செவிலியருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவர் சந்தீப் சோனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெண் செவிலியர் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement