முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எந்த நடிகரும் அதை செய்திருக்க மாட்டார்..!! ஆனால் தனுஷ் செய்தார்..!! சிவகார்த்திகேயன் நன்றி கெட்டவர்..!! பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Sivakarthikeyan is ungrateful. He has abandoned everyone who raised him and made him a hero.
01:31 PM Aug 16, 2024 IST | Chella
Advertisement

'கொட்டுக்காளி' திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ”என்னால்தான் இவர் உருவானார் என நான் யாரையும் சொல்ல மாட்டேன். ஏனென்றால், என்னை பத்தி அப்படியே சிலர் பேசுறாங்க. ஆனால், நான் அப்படி இல்லை” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், சோசியல் மீடியாவில் சிவகார்த்திகேயனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் தான், சிவகார்த்திகேயன் பேசியது குறித்து சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “சிவகார்த்திகேயன் நன்றி கெட்டவர். தன்னை வளர்த்துவிட்ட, தன்னை ஒரு ஹீரோவாக மாற்றிய அனைவரையுமே அவர் ஒதுக்கியுள்ளார். மெரினா படத்தில் அவரை அறிமுகம் செய்தது பாண்டிராஜ் தான். ஆனால், அவர் மீண்டும் கால்ஷீட் கேட்டபோது, பல ஆண்டுகள் வருடங்கள் இழுத்தடித்தார்.

சிவாவின் திரைவாழ்வில் அதிக அக்கறை கொண்டிருந்தவர் நடிகர் தனுஷ். இரண்டு சின்ன படங்கள் மட்டுமே நடித்திருந்த அவரை, தனது சொந்த காசை போட்டு எதிர் நீச்சல் என்கிற படத்தை தயாரித்தார். இதை எந்த ஹீரோவும் செய்திருக்க மாட்டார். ஆனால், தனுஷ் செய்தார். ஆனால், அவருடன் பேசுவதையே சிவகார்த்திகேயன் நிறுத்திக் கொண்டார்.

தனுஷ் இல்லை என்றால் சிவகார்த்திகேயன் உருவாகி இருக்கவே முடியாது. இதை எந்த ஊடகத்திலும், பேட்டியிலும் தனுஷ் சொன்னதே இல்லை. ஆனால், அவர் அப்படி சொன்னது போல பொய்யாக பேசுகிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில், பல ஹிட் பாடல்களை கொடுத்த டி. இமானுக்கு சிவா என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். சிவகார்த்திகேயன் ஒரு நன்றி கெட்டவர்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : விளாசிய முதல்வர்..!! அரண்டுபோன திமுக மாவட்ட செயலாளர்கள்..!! நான் அமெரிக்காவில் இருந்தாலும்…!!

Tags :
சிவகார்த்திகேயன்தனுஷ்பிஸ்மி
Advertisement
Next Article