For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று தூத்துக்குடி ஆய்வு...! டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிர்மலா சீத்தாராமன்...!

05:30 AM Dec 26, 2023 IST | 1newsnationuser2
இன்று தூத்துக்குடி ஆய்வு     டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிர்மலா சீத்தாராமன்
Advertisement

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிர்மலா சீத்தாராமன், இன்று தூத்துக்குடி செல்ல உள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன.

Advertisement

இந்நிலையில் தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மதியம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார். முன்னதாகவே மதியம் 12:30 மணியளவில் வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தடைந்த நிர்மலா சீத்தாராமன், இன்று தூத்துக்குடி செல்ல உள்ளார். தூத்துக்குடி டவுன், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் வீடுகள் விளைநிலங்கள் என அனைத்தையும் நேரில் பார்வையிட உள்ளார்.

Tags :
Advertisement