முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்தது மோதிய 7 கார்.. 2 லாரி... ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து... ஒருவர் மரணம்...!

Next 7 cars collided.. 2 lorries... Horrible accident on Hosur National Highway... One died
06:55 AM Aug 26, 2024 IST | Vignesh
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

நேற்று மாலை 4 மணி அளவில் கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற சரக்கு லாரி மீது மோதியது. இதில் அந்த லாரி மற்றொரு லாரி மீது மோதியது. அது மற்றொரு லாரி மீது மோதியது. தேசிய நெடுஞ்சாலை என்பதால், கார்கள் மற்றும் அரசு பஸ் என அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. இதில் 7 கார்கள், 3 லாரிகள், ஒரு அரசு பஸ் விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில் ஒரே காரில் சென்ற கோவையை சேர்ந்த ஆயில் மில் அதிபர் வெங்கடேஷ் (33), அவரது நண்பர் அரவிந்த் (30), ஊழியர்கள் தஞ்சாவூரை சேர்ந்த துரை (24), பழனியை சேர்ந்த கார்த்திக்ராஜா (26) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். மற்றொரு காரில் சென்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த வேல்விழி(65), அவரது மகன் பூபேஷ், டிரைவர் ரவி(55) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். மொத்தம் 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், டிரைவர் ரவி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags :
Accidentcar accidentdeathKrishnagri
Advertisement
Next Article