முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாமக்கல்: "அங்கன்வாடி பெண் ஊழியர்களை ஆபாச படம் எடுத்த பத்திரிகையாளர்.." காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

02:38 PM Jan 27, 2024 IST | 1newsnationuser7
Advertisement

நாமக்கல் அருகே அங்கன்வாடி ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜங்களாபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. 46 வயதான இவர் பத்திரிக்கை ஒன்றில் நிருபர் மற்றும் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற பெரியசாமி அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஊழியர்களை மறைந்திருந்து புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவரைப் பிடித்து கேட்டபோது ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தனக்கு பணம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார் மேலும் பணம் கொடுக்க மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கிய எஸ்.ஐ பிரியா பெரியசாமியை கைது செய்தார் . அவர் மீது பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டது மற்றும் இரட்டை அர்த்த வசனங்களில் பேசியது போன்ற பல புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

Tags :
Anganwadi Employeescrime against womennamakkalObscene PicturesReporter Arrested
Advertisement
Next Article