முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாட்டின் 30-வது ராணுவ தளபதி நியமனம்!. உபேந்திர திவேதி வரும் 30ம் தேதி பதவியேற்கிறார்!

Upendra Dwivedi will take office as the 30th Army Chief of the country on the 30th.
07:39 AM Jun 12, 2024 IST | Kokila
Advertisement

New Army Chief: நாட்டின் 30-வது ராணுவ தளபதியாக உபேந்திரா திவேதி வரும் 30ம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.

Advertisement

நாட்டின் தற்போதைய ராணுவ தளபதியாக இருக்கும், மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில், புதிய ராணுவ தளபதியாக, ராணுவத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் 30-வது ராணுவ தளபதியாக உபேந்திரா திவேதி வரும் 30ம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி ஜூலை 1, 1964 இல் பிறந்தார், 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி இந்திய இராணுவத்தின் காலாட்படையில் (ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்) நியமிக்கப்பட்டார். ஏறக்குறைய 40 வருடங்கள் இந்த நீண்ட மற்றும் புகழ்பெற்ற சேவையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். பல்வேறு கட்டளை, பணியாளர்கள், பயிற்றுவிப்பு மற்றும் வெளிநாட்டு நியமனங்களில் பணியாற்றியுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியின் கட்டளை நியமனங்களில் ரெஜிமென்ட் (18 ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்), பிரிகேட் (26 பிரிவு அசாம் ரைபிள்ஸ்), டிஐஜி, அசாம் ரைபிள்ஸ் (கிழக்கு) மற்றும் 9 கார்ப்ஸ் ஆகியவை அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர், இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2022-2024 வரை டைரக்டர் ஜெனரல் காலாட்படை மற்றும் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் இன் சீஃப் (தலைமையகம் வடக்குக் கட்டளை) உள்ளிட்ட முக்கியமான பதவிகளையும் வகித்துள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் த்விவேதி சைனிக் பள்ளி ரேவா, தேசிய பாதுகாப்புக் கல்லூரி மற்றும் அமெரிக்க ராணுவப் போர்க் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். DSSC வெலிங்டன் மற்றும் ராணுவப் போர் கல்லூரி, Mhow ஆகியவற்றிலும் படிப்புகளைப் படித்துள்ளார்.

யு.எஸ்.ஏ.டபிள்யூ.சி, கார்லிசில், யு.எஸ்., என்.டி.சி.க்கு இணையான படிப்பில், திவிவேதிக்கு 'டிஸ்டிங்விஷ்ட் ஃபெலோ' விருது வழங்கப்பட்டது. அவர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆய்வுகளில் எம்-பில் பட்டமும், வியூக ஆய்வுகள் மற்றும் ராணுவ அறிவியலில் இரண்டு முதுகலைப் பட்டங்களும் பெற்றுள்ளார்.

ஏப்ரல் 30, 2022 இல் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் பாண்டே(62), மே 2024, 31ம் தேதி ஓய்வு பெற இருந்தார். ஆனால் பாண்டேவுக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை ஒரு மாத சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, ராணுவத் தளபதிகளின் தலைவர்களின் பதவிக்காலம் 62 வயது அல்லது மூன்று ஆண்டுகள் எது முந்தையதோ அதில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகனுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை..!! என்ன குற்றத்திற்காக தெரியுமா..?

Tags :
Inauguration on June 30New army commanderUpendra Dwivedi
Advertisement
Next Article