For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நேபாள விமான விபத்து: கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு..!

Nepal plane crash: The black box of the plane that killed 18 people was found!
06:30 AM Jul 26, 2024 IST | Kokila
நேபாள விமான விபத்து  கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
Advertisement

Nepal plane crash: நேபாளம் தலைநகர் காட்மண்டு அருகே விபத்துக்குள்ளான சௌர்யா ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நேபாளம் தலைநகர் காட்மண்டு அருகே சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் போக்காராவுக்கு சென்றுக்கொண்டிருந்தது. புதன்கிழமை திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது, இதில் விமானியை தவிர அனைவரும் பலியாகினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், தற்போது, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகளுக்காக விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் துணை இயக்குநர் ஜெனரல் ஹன்சா ராஜ் பாண்டே தெரிவித்தார். விசாரணைக் குழுவில் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் ரதீஷ் சந்திர லால் தலைமையில் நான்கு நிபுணர்கள் உள்ளனர். குழு தனது விசாரணை அறிக்கையை பரிந்துரைகளுடன் 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அடையாளம் காணும் பணியில் உள்ளன, இன்றைக்குள் அவை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பாண்டே கூறினார். இதற்கிடையில், சூர்யா ஏர்லைன்ஸ் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரான கேப்டன் மனிஷ் ராஜ் ஷக்யா இங்குள்ள காத்மாண்டு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக கூறப்படுகிறது. ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவரால் பேச முடியும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Readmore: பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா!. இன்று கோலாகல தொடக்கம்!. 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!

Tags :
Advertisement