For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்…! ஈரானிய அதிபர் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு…!

National flag will be flown at half-mast across India today...! Nationwide mourning for Iranian president's death
09:33 AM May 21, 2024 IST | Kathir
இன்று இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்…  ஈரானிய அதிபர் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு…
Advertisement

ஈரானிய அதிபர் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொடிகளை அரைக்கம்பத்தில் ஏற்றி, உத்தியோகபூர்வ கேளிக்கைகள் நிறுத்தப்பட்டு, இன்று இந்திய அரசு துக்க நாளாக அறிவிக்கிறது.

Advertisement

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் கடந்த 19ஆம் தேதி ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து நேற்றைய தினம் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டறியப்பட்டு அதிபர் ரைசி, அவருடன் பயணித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததால், மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (மே 21ஆம் தேதி) இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், மேலும் இன்றைய தினம் உத்தியோகப்பூர்வ பொழுதுபோக்கு எதுவும் இருக்காது என்று MHA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read More: ஈரானின் இடைக்கால அதிபராகும் முகமது மொக்பர்..! யார் இந்த மொக்பர்…! முழு விவரம்..!

Tags :
Advertisement