முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

போதை பொருள்..!! சிறுநீரில் தண்ணீரை கலந்து கொடுத்த பிரபல நடிகை..!! மருத்துவ குழுவினர் அதிர்ச்சி..!!

11:33 AM Nov 27, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராகினி திவேதி. இவர் பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். முதலில் குடும்பபாங்கில் நடித்த இவர், பின்னர் உச்சகட்ட கிளாமர் காட்டினார். விருது விழா ஒன்றின் போது தன்னுடைய மேலாடை அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலானது.

Advertisement

இந்நிலையில், இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். இவர் போதை பொருள் பயன்படுத்தினார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இவருடைய சிறுநீரை பரிசோதனை செய்ய மருத்துவ ஆய்வு குழுவினர் சென்றனர். அப்போது, தன்னுடைய சிறுநீரில் குடிநீரைக் கலந்து போதை பொருள் பயன்படுத்துவதற்கு உண்டான தடையத்தை அழிக்க முயன்றார் ராகினி திவேதி என்று மருத்துவ ஆய்வு குழு அதிர்ச்சியை கிளப்பியது.

சிறுநீரில் தண்ணீரை கலப்பதன் மூலம் சிறுநீரை நீர்த்துப் போக செய்துவிட முடியும். எனவே, ஆய்வு முடிவில் இவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்ற முடிவு வர வேண்டும் என்பதற்காக தன்னுடைய சிறுநீரில் குடிநீர் கலந்து கொடுத்து இருக்கிறார் என்று மருத்துவ ஆய்வு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags :
நடிகர் ஜெயம் ரவிநடிகை ராகினி திவேதி
Advertisement
Next Article