For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!! அப்போ மும்பை டீம்? வெளியான தகவல்..!!

Mumbai star player Suryakumar Yadav next IPL There are reports that he is going to play for the first Kolkata team
12:51 PM Aug 25, 2024 IST | Mari Thangam
கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்     அப்போ மும்பை டீம்  வெளியான தகவல்
Advertisement

இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அவர் மும்பை அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகள் போட்டி போடும் என்று கூறப்படுகிறது.

Advertisement

ஆனால் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்களது அணிக்கு வந்தால் அவருக்கு கேப்டன் பதவி வழங்கும் என்கிற ஆஃபரை சூரியகுமாருக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெகா ஏலத்திற்கு முன்னதாகவே அவர் கொல்கத்தா அணியுடன் இணையம் பட்சத்தில் அவருக்கு கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே தனது ஆரம்ப காலத்தில் கொல்கத்தா அணிக்காக ஆடியவர்யுள்ளார். மேலும், கவுதம் கம்பீருக்கு மிகவும் நெருக்கமானவர். கம்பீரின் பலமான ஆதரவையும் அவர் பெற்றுள்ளதால் கொல்கத்தா அணி அவரை கேப்டனாக மாற்ற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சலுகையை ஏற்றுக்கொண்டு அவர் கொல்கத்தா அணிக்கு செல்வாரா? மாட்டாரா? என்பது ஏலத்திற்கு முன்னரே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும், அவர்கள் தங்கள் புதிய அணியுடன் அடுத்த ஐ.பி.எல். தொடரில் ஆடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read more ; மாணவர்களுக்கு அதிர்ச்சி…! அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு…!

Tags :
Advertisement