For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மும்பை-சென்னை!. 120 கோடியில் தனியார் ஜெட் விமானத்தை வாங்கிய நடிகர் சூர்யா!. ஜோதிகாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!.

After ₹70 Cr Home, Virtual Signaler Suriya Allegedly Purchases ₹120 Cr Private Jet; Netizens Question Hypocrisy Over Jothika's Previous Comments On Spending For Schools & Hospitals
07:01 AM Aug 24, 2024 IST | Kokila
மும்பை சென்னை   120 கோடியில் தனியார் ஜெட் விமானத்தை வாங்கிய நடிகர் சூர்யா   ஜோதிகாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
Advertisement

Actor Suriya: தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது டசால்ட் ஃபால்கன் 2000 (Dassault falcon 2000) என்ற சகல வசதிகளுடன் கூடிய தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் அந்த விமானம் ரூ.120 கோடி எனவும் கூறப்படுகிறது.

Advertisement

தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் சூர்யா. சூர்யாவின் படம் சமீபக்காலமாக அவ்வளவாக வெளிவரவில்லை. ஆனால், இனி அடுக்கடுக்காக அவரது படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படம் பெரியளவு பொருட்செலவில் ஒரு வரலாற்றுக் கலந்த ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரியளவு எதிர்பார்ப்புகள் உள்ளன.

இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். மேலும் வாடிவாசல், புறநானூறு போன்ற படங்கள் லைனப்பில் உள்ளன. இதற்கிடையே சூர்யா இப்போது முக்கால்வாசி தனது மனைவியுடன் மும்பையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அவ்வப்போது மட்டுமே சென்னை வந்து செல்கிறாராம்.

இப்படியான சூழ்நிலையில் சூர்யா ஒரு தனி விமானம் வாங்கியிருக்கிறாராம். டசால்ட் ஃபால்கன் 2000 (Dassault falcon 2000) என்ற சகல வசதிகளுடன் கூடிய தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த விமானம் ரூ.120 கோடி எனக் கூறப்படுகிறது. அதில், நவீன தொழில்நுட்ப வசதிகள், ஆடம்பர அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன. இதனால், தமிழகத்தில் அதிக விலையில் தனி விமானம் வைத்திருக்கும் நடிகராக சூர்யா விளங்குவார் என்பதில் சந்தேகமே இல்லை.

பாலிவுட் நடிகர்கள் பலர் தனி விமானம் வைத்திருப்பது தெரியும். ஷாருக்கான் கூட சமீபத்தில் ஒரு விமானம் வாங்கியதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. தென்னிந்தியாவை பொறுத்தவரை சிரஞ்சீவி, ராம் சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களுக்கென சொந்த விமானம் வைத்திருக்கின்றனர். மேலும் தமிழ் சினிமாவின் நயன்தாரா கூட விமானம் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இப்போது இந்த லிஸ்டில் சூர்யாவும் இணைந்திருக்கிறார்.

சூர்யா தனிவிமானம் வாங்கியதாக கூறப்படும் நிலையில், அவரது மனைவி ஜோதிகாவை தற்போது நெட்டிசன்கள் வம்பிழுத்து வருகின்றனர். அதாவது, 2020ல் நடந்த விருது வழங்கும் விழாவில், கோவில்களை விட பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பதன் முக்கியத்துவத்தை ஜோதிகா வலியுறுத்தினார். பிரகதீஸ்வர கோவிலின் பிரமாண்டத்தை உதய்பூரின் அரண்மனைகளுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் உள்ள ரூ.70 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டில் வசித்து வந்தாலும், ஆயுதம் ஏந்திய போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்தநிலையில், கையகப்படுத்துவது தனிப்பட்ட முடிவு என்றாலும், அவர்களின் பொது அறிக்கைகள் பெரும்பாலும் நல்லொழுக்க உணர்வை வெளிப்படுத்துகின்றன. இந்த முரண்பாடு அவர்களின் பாசாங்கு தனத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். மேலும் அவர்களின் கொள்கைகள் மற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும், தங்களுக்கு பொருந்தாது என்பதை போல, 'இந்தப் பணத்தை 50 பள்ளிகள் கட்டப் பயன்படுத்தியிருக்கலாம்' என்று ஜோதிகா உங்களுக்கு அறிவுறுத்தவில்லையா' என்று நடிகர் சூர்யாவை நெட்டிசன் ஒருவர் ட்ரோல் செய்துள்ளார்.

Readmore: கேப்டன் ஜோஸ் பட்லருடன் கருத்து வேறுபாடு!. வெளியேறிய கோச் ஆன்ட்ரு ஃபிளின்டாப்!.

Tags :
Advertisement