For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

8ஆம் வகுப்பு மாணவனுடன் பலமுறை உடலுறவு..!! போதையில் ஆசை தீர அனுபவித்த ஆசிரியை..!!

07:34 AM Nov 10, 2023 IST | 1newsnationuser6
8ஆம் வகுப்பு மாணவனுடன் பலமுறை உடலுறவு     போதையில் ஆசை தீர அனுபவித்த ஆசிரியை
Advertisement

அமெரிக்காவில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி நடுநிலைப் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்த பெண் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த 2015இல் நடந்ததாகக் கூறப்படுகிறது. 31 வயதான மெலிசா மேரி கர்டிஸ் மாண்ட்கோமெரி என்ற நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த போது இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisement

இச்சம்பவம் நடந்த போது அந்த ஆசிரியருக்கு 22 வயதாகி இருந்தது. மறுபுறம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு வெறும் 14 வயது மட்டுமே ஆகியிருந்தது. அப்போது அந்த மாணவர் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட அந்த நபர் புகார் அளித்த நிலையில், கடந்த மாதம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், "அந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். கடந்த 2015இல் அந்த நபர் சிறுவனாக இருந்த போது இந்த பாலியல் அத்துமீறல் தொடங்கியுள்ளது. அந்த சிறுவனிடம் இவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்றனர். கடந்த 2015 ஜனவரி மற்றும் மே மாதம் வரை இந்தச் சம்பவம் நடந்துள்ளன. அந்த பெண் தனது கார் தொடங்கிப் பல இடங்களில் வைத்து மாணவரிடம் அத்துமீறி இருக்கிறார்.

அந்த மாணவருக்கு மது மற்றும் போதைப் பொருட்களைக் கொடுத்துள்ளார். இதைக் கொடுத்து மயங்கிய பெண் ஆசிரியர் அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். 20 முறைக்கு மேல் இந்த அத்துமீறல் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அந்த பெண்ணுக்கு எதிராகக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் மீது பாலியல் அத்துமீறல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தாமாக முன்வந்து சரணடைந்தார். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியரே இதுபோல நடந்தால் மாணவர்களின் நிலை என்னவாகும் என்றும் நெட்டிசன்கள் பலரும் கவலையடைந்துள்ளனர்.

Tags :
Advertisement